ரூ.13 கோடி செலவில் கோவளம் உள்ளிட்ட 11 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

0
19

ரூ.13 கோடியே 62 லட்​சம் செல​வில் கோவளம் உள்​ளிட்ட 11 ஊரக குடி​யிருப்​பு​களுக்கு கூட்டு குடிநீர் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்​தார்.

கோவளம் ஊராட்சி மற்​றும் 10 ஊரகக் குடி​யிருப்புபகு​தி​களுக்கு ரூ.13 கோடியே 62 லட்​சம் மதிப்​பில் உயிர் நீர் இயக்​கம் மற்​றும் மாநில அரசு ஆகிய​வற்​றின் பங்​களிப்​புடன் கூட்டு குடிநீர் திட்​டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

இதற்​காக புதுப்​பாக்​கம் கிராமத்​தில் 5 திறந்​தவெளி கிணறுகள் அமைக்​கப்​பட்டு அங்​கிருந்து 10 கிமீ தூரத்​துக்கு குழாய்​கள் புதைக்​கப்​பட்டு கோவளம் நீர்த்​தேக்க தொட்​டிக்கு கொண்டு வரப்​பட்​டது.

இத்​திட்​டத்​துக்​காக ஏற்​கெனவே பயன்​பாட்​டில் இருந்த ஒரு மேல் நிலை நீர்த்​தேக்க தொட்​டி​யுடன் புதி​ய​தாக ஒரு தரை மட்ட நீர்த்​தேக்க தொட்டி அமைக்​கப்​பட்​டது.

இந்த திட்​டத்​தின் கீழ் கோவளம் ஊராட்சி மற்​றும் திருப்​போரூர் ஒன்​றி​யத்​தில் அடங்​கிய 10 ஊரகக் குடி​யிருப்பு பகு​தி​களில் வசிக்​கும் 12 ஆயிரம் பேர் பயன் பெறு​வர்.

இத்​திட்​டத்தை தலை​மைச் செயல​கத்​தில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்​தார். கோவளத்​தில் நடை​பெற்ற இதற்​கான விழா​வில் செங்கை ஆட்​சி​யர் சினேகா புதிய திட்​டத்​தின் கல்வெட்டை திறந்து வைத்து குடிநீர் விநி​யோகத்தை தொடங்கி வைத்​தார்.

இந்த நிகழ்ச்​சி​யில் திருப்​போரூர் வட்​டாட்​சி​யர் சரவணன், வட்​டார வளர்ச்சி அலு​வலர்​கள் கலைச்​செல்​வன், அரி பாஸ்​கர் ராவ், துணை வட்​டார வளர்ச்சி அலு​வலர் பிரேமலதா உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here