முஞ்சிறை பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி விமல்ராஜ் (39), தனது 10 வயது மகன் லிசோஸுடன் ஹோட்டலில் உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு (23) ஓட்டி வந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














