14 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

0
21

இலங்கை – பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி டி 20 ஆட்​டம் நேற்று முன்​தினம் இரவு தம்​புலா​வில் நடை​பெற்​றது. மழை காரண​மாக இந்த ஆட்டம் 12 ஓவர்​களாக நடத்​தப்​பட்​டது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்கள் குவித்​தது. கேப்​டன் தசன் ஷனகா 9 பந்​துகளில், 5 சிக்​ஸர்​களு​டன் 34 ரன்​கள் விளாசி​னார். குஷால் மெண்டிஸ் 30, ஜனித் லியனகே 22, கமில் மிஷ்ரா 20, சரித் அசலங்கா 21 ரன்​கள் சேர்த்​தனர்.

161 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணியால் 12 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 146 ரன்கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்டன் சல்​மான் ஆகா 12 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் விளாசி​னார். மொகமது நவாஷ் 28, கவாஜா நபே 26 ரன்​கள் சேர்த்​தனர்.

இலங்கை அணி சார்​பில் வனிந்து ஹசரங்கா 4, மதீஷா பதிரனா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 14 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரை 1-1 என சமனில் முடித்தது. முதல் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டம் மழை காரண​மாக ரத்து செய்​யப்​பட்​டிருந்​தது.

சர்​வ​தேச டி 20-ல் இலங்கை அணி தனது சொந்த மண்​ணில் 14 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் பாகிஸ்​தான் அணியை தோற்​கடித்​துள்​ளது. கடைசி​யாக பாகிஸ்தானுக்கு எதி​ராக தனது சொந்த மண்​ணில் இலங்கை அணி கடந்த 2012-ம் ஆண்டு வெற்​றி கண்டிருந்தது. மதீஷா பதிரனா பந்தில் போல்டான மொகமது நவாஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here