அகமதாபாத்தில் இன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

0
27

இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 5-வது டி 20 கிரிக்​கெட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் கட்​டாக்​கில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 101 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடர்ந்து முலான்​பூரில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதன் பின்​னர் தரம்​சாலா​வில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் இந்திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. லக்​னோ​வில் நேற்று முன்​தினம் நடை​பெற இருந்த 4-வது ஆட்​டம் பனிமூட்​டம் காரண​மாக ரத்து செய்​யப்​பட்​டது. இதன் மூலம் தொடரில் இந்​திய அணி 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்கிறது.

இந்​நிலை​யில் கடைசி மற்​றும் 5-வது டி 20 கிரிக்​கெட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் இன்று இரவு நடை​பெறுகிறது. இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் டி 20 தொடரை 3-1 என கைப்​பற்றி கோப்​பையை வெல்​லும். அதேவேளை​யில் தோல்​வியை சந்​திக்க நேரிட்​டால் தொடரை 2-2 என சமனில் நிறைவு செய்​யும்.

இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், துணை கேப்​டன் ஷுப்​மன் கில் ஆகியோரது பார்ம் கவலை அளிக்​கும் வகை​யில் உள்​ளது. சூர்​யகு​மார் யாதவ் இந்த ஆண்​டில் 20 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள போதி​லும் ஒரு அரை சதம் கூட அடிக்​க​வில்​லை. 14.20 சராசரி​யுடன் 213 ரன்களையே சேர்த்​துள்​ளார்.

இது ஒரு​ புறம் இருக்க ஷுப்​மன் கில் ரன்​கள் சேர்க்க தடு​மாறு​வது இந்​திய அணி​யின் டாப் ஆர்​டரை பல வீன​மாக்​கு​வ​தாக அமைந்துள்​ளது. அணி​யின் துணை கேப்​ட​னாக டி 20 வடிவத்​துக்கு திரும்​பிய ஷுப்​மன் கில்​லிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு இது​வரை வெளிப்​பட​வில்​லை. போதாத குறைக்கு தற்​போது அவர், காய​மும் அடைந்​துள்​ளார்.

பேட்​டிங் பயிற்​சி​யின் போது காலில் காயம் அடைந்த அவர், அகமதா​பாத்​தில் இந்​திய அணி​யுடன் இணைந்​துள்​ளார். எனினும் ஷுப்மன் கில் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வா​ரா? என்​பது உறுதி செய்​யப்​பட​வில்​லை. ஒரு​வேளை அவர், களமிறங்க முடியாத நிலை உரு​வா​னால் சஞ்சு சாம்​சன் தொடக்க வீர​ராக விளை​யாடக்​கூடும்.

தொடக்க வீர​ராக சஞ்சு சாம்​சன் 14 போட்​டிகளில் களமிறங்கி 3 சதங்​கள், ஒரு அரை சதம் விளாசி உள்​ளார். அதேவேளை​யில் நடுவரிசை​யில் அவர், சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்​தி​யது இல்​லை. நடு​வரிசை​யில் சாம்​சன் 8 ஆட்​டங்​களில் களமிறங்கி 23 சராசரி​யுடன் 138 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார்.

இதன் காரண​மாகவே தற்​போதைய தொடரில் அவர், வெளியே அமர​வைக்​கப்​பட்​டுள்​ளார். ஒரு​வேளை இன்​றைய ஆட்​டத்​தில் சாம்​சன் தொடக்க வீர​ராக களமிறக்​கப்​பட்​டால் அந்த வாய்ப்பை அவர், சரி​யாக பயன்​படுத்​திக் கொள்​வ​தில் முனைப்பு காட்டக்கூடும்.

பந்​து ​வீச்சை பொறுத்​தவரை​யில் தரம்​சாலா​வில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தது. ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே ஆகியோர் பந்​து​ வீச்​சிலும் உறுதுணை​யாக உள்​ளனர். அர்​ஷ்தீப் சிங் தொடக்க ஓவர்​களில் அழுத்​தம் கொடுப்​பது பலமாக உள்​ளது.

சொந்த காரணங்​களுக்​காக 3-வது போட்​டி​யில் இருந்து வில​கி​யிருந்த ஜஸ்​பிரீத் பும்ரா அணி​யுடன் மீண்​டும் இணைந்​துள்​ளார். இதனால் பந்​து​வீச்சு பலம் பெறக்​கூடும். எனினும் அகம​தா​பாத் ஆடு​களம் மட்டை வீச்​சுக்கு சாதக​மாக இருக்​கும் என்​ப​தால் தென் ஆப்​பிரிக்க அணி​யின் பேட்​டிங் வரிசை இந்​தி​யா​வுக்கு நெருக்​கடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

தென் ஆப்​பிரிக்க அணி இந்த சுற்​றுப்​பயணத்​தில் எதிர்​பார்க்​காத அளவில் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது. டெஸ்ட் தொடரை 2-0 என முழு​மை​யாக வென்ற அந்த அணி, ஒரு​நாள் போட்​டித் தொடரை 1-2 என இழந்த போ​தி​லும் அழுத்​தம் கொடுத்​திருந்​தது. இதனால் அந்த அணி இன்று நடை​பெறும் கடைசி டி 20 ஆட்டத்தில் வெற்​றி பெற்​று தொடரை சமன்​ செய்​ய ​முயற்​சி செய்யக்​கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here