தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி, இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
4 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 3 மாதங்களுக்கு பிறகு களமிறங்க உள்ளார்.
இந்த இரு போட்டிகளையும் அவர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.














