சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ்: இந்​தி​யா​வின் ஸ்ரீவள்​ளி, சகஜா 2-வது சுற்​றுக்கு முன்​னேற்​றம்

0
21

சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள் போட்​டிகளை நடத்த முடி​யாமல் போனது. இந்​நிலை​யில் 3-வது நாளான நேற்று போட்​டிகள் தொடங்​கின.

ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான செக்​குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் பிரான்​ஸின் லியூ யானை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். இந்​தி​யா​வின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவ​தியை தோற்​கடித்​தார்.

இந்​தோ​னேஷி​யா​வின் ஜானிஸ் டிஜென் 6-4, 6-7(5-7), 6-2 என்ற செட் கணக்​கில் 2 மணி நேரம் 2 நிமிடங்​கள் போராடி ஜெர்​மனி​யின் கரோலின் வெர்​னர் வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். போட்​டித் தரவரிசை​யில் 3-வது இடத்​தில் உள்ள குரோஷி​யா​வின் முன்​னணி வீராங்​க​னை​யான டோனா வெகிக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் எளி​தாக இந்​தி​யா​வின் வைஷ்ணவி அட்​கரை வீழ்த்​தி​னார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் சகஜா யாமலபள்ளி 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் இந்​தோ​னேஷி​யா​வின் பிரிஸ்கா நுக்​ரோஹோவை தோற்​கடித்து 2-வது சுற்​றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here