நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, மிர்னா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதை அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சுந்தர்.சி சொன்ன லைன் பிடித்திருந்ததாகவும் முழுக் கதையையும் அவர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் இதற்கான கதை கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதை நெல்சன் இயக்குவார் என்றும் 2027-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தை கமல்ஹாசனே தயாரிக்க இருக்கிறார். இந்தப்படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் அதன் பிறகு நடிப்பிலிருந்து அவர் ஓய்வு பெறலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.














