குமரி மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே நீளம் மற்றும் உயரமான மாத்தூர் தொட்டி பாலம், 1240 அடி நீளம் மற்றும் 103 அடி உயரம் கொண்டது, தற்போது பல இடங்களில் பழமையான கைப்பிடி சுவர்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. நடந்து செல்லும் பகுதியிலும் கீறல்கள் காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.














