மகாபாரதம் டி.வி தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

0
33

பி.ஆர்​.சோப்​ரா​வின் 1988-ம் ஆண்டு தொலைக்​காட்சி தொட​ரான மகா​பாரத்​தில் கர்​ணன் கதா​பாத்​திரத்​தில் நடித்து மிக​வும் பிரபல​மான நடிகர் பங்​கஜ் தீர் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 68.

புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்ட பங்​கஜ் தீர், கடந்த சில மாதங்​களாக மருத்​துவ சிகிச்சை பெற்று வந்​தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்​தார். சந்​திர​காந்​தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்​காட்​சித் தொடர்​களி​லும் சோல்​ஜர், ஆண்​டாஸ், பாட்ஷா உள்​ளிட்ட பல்​வேறு திரைப் படங்​களி​லும் அவர் நடித்​துள்​ளார். இவரது மகன் நிகி​தின் தீர், மரு​மகள் கிராத்​திகா செங்​கரும் நடிகர்​கள் ஆவர்.

பஞ்​சாபை சேர்ந்த பங்​கஜ் தீர், திரைப்பட இயக்​குநர் சி.எல்​.தீரின் மகன் ஆவார். நடிப்பு மட்​டுமின்றி தனது சகோ​தரருன் சேர்ந்து மும்​பை​யில் படப்​பிடிப்பு ஸ்டுடியோவை நிறு​வியதன் மூலம் திரைப்​படத் தயாரிப்​பிலும் முன்​னணி வகித்​தார். 2010-ல் நடிப்பு பயிற்​சிக்​கான அகாட​மியை தொடங்​கி​னார். கடந்த 1980-களில் திரைப்​படங்​களில் சிறிய கதா​பாத்​திரங்​களில் நடித்து வந்த அவருக்கு பி.ஆர்​.சோப்​ரா​வின் மகா​பாரதம் தொலைக்​காட்சி தொடர் மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here