யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173*, சாய் சுதர்சன் 87 ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 318 ரன் குவிப்பு

0
31

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் நாளில் இந்​திய அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் சதம் விளாசி அசத்​தி​னார். அவருக்கு துணை​யாக விளை​யாடிய சாய் சுதர்​சன் அரை சதம் அடித்​தார்.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஷுப்​மன் கில் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி சிறப்​பான தொடக்​கம் கொடுத்​தது. 17.3 ஓவர்​களில் 58 ரன்​கள் சேர்க்​கப்​பட்ட நிலை​யில் இந்த ஜோடி பிரிந்​தது. கே.எல்​.​ராகுல் 54 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோமல் வாரிக்​க​னின் சுழற்​பந்து வீச்சை கிரீஸை விட்டு வெளியே வந்து விளை​யாட முயன்​ற​போது டெவின் இம்​லாக்​கால் ஸ்டெம்​பிங்க் செய்​யப்​பட்​டார்.

இதையடுத்து களமிறங்​கிய சாய் சுதர்​சன், யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார். யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 145 பந்​துகளில், 16 பவுண்​டரி​களு​டன் தனது 7-வது சதத்தை விளாசி​னார். சாய் சுதர்​சன் 87 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் தனது 2-வது அரை சதத்தை கடந்​தார். நிதான​மாக விளை​யாடி வந்த சாய் சுதர்​சன் 165 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோமல் வாரிக்​கன் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

2-வது விக்​கெட்​டுக்கு யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், சாய் சுதர்​சன் ஜோடி 193 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து ஷுப்​மன் கில் களமிறங்​கி​னார்.
முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இந்​திய அணி 90 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 253 பந்​துகளில், 22 பவுண்​டரி​களு​டன் 173 ரன்​களும், ஷுப்​மன் கில் 68 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 20 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க இந்​திய அணி இன்று 2-வது நாள் ஆட்​டத்​தை தொடர்ந்​து விளை​யாடுகிறது.

மீண்டு வந்தது எப்படி? – டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் இந்திய அணியின் பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் கூறும்போது, “நான் அழுத்தத்தைப் பற்றியோ அல்லது ஆட்டத்தின் நிலையை பற்றியோ யோசிக்கவில்லை. இந்தியா ‘ஏ‘ தொடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகுதான் இந்த தொடரில் விளையாடுகிறேன். அதனால் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே என் கவனம் இருந்தது. வேறு எதையும் பற்றி யோசிக்காமல், முடிந்தவரை அமைதியாக இருக்கவும், கடினமான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் முயற்சித்தேன்.

இது எனக்கு மிகவும் அமைதியான இன்னிங்ஸ். போட்டிக்கு முன்னதாக, நான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு, விஷயங்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக இயல்பாக நடக்க விட முடிவு செய்திருந்தேன். அதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்த முக்கிய எண்ணம்.

மேலும், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்வது அருமையாக இருந்தது, நல்ல பந்துகளில் கூட அவர் பவுண்டரிகளை அடிக்கும் விதம் மறுமுனையில் இருந்து பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்புகிறோம். முடிந்தவரை நீண்ட நேரம் பேட்டிங் செய்து சிறந்த ஸ்கோரைப் பெற விரும்புகிறோம். எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மனதில் இல்லை, ஆனால் மேற்கிந்திய தீவுகளை இரண்டு முறை பேட்டிங் செய்ய வைப்பதே குறிக்கோள்’’ என்றார்.

5-வது முறையாக 150+: டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான 23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவர், 7 சதங்களை அடித்துள்ளார். இதில் 5 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த வகையில் 24 வயதை எட்டுவதற்கு முன்னர் 150+ ரன்களை அதிக முறை குவித்த வீரர் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் மட்டுமே. அவர், 24 வயதை எட்டுவதற்கு முன்னதாக 8 முறை 150+ ரன்களை வேட்டையாடி இருந்தார்.

கடைசியில் தேக்கம்: இந்திய அணி முதல் முதல் செஷனில் 28 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 94 ரன்கள் சேர்த்தது. 2-வது செஷனில் 30 ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 126 ரன்கள் குவித்தது. ஆனால் 3-வது செஷனில் 32 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்தது. இறுதி செஷனில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் ஓரளவு ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here