பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு

0
20

பிரதமர் மோடி​யுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிக்​கும் பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நிறுத்​தி​னார்.

இஸ்​ரேல் – காசா அமைதி திட்​டம் குறித்து 20 அம்ச கொள்கை திட்​டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்​தார். இது தொடர்​பாக எகிப்​தில் நடை​பெற்ற இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டது. இதன்​படி உயிரோடு இருக்​கும் இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​படு​வர். இறந்த பிணைக் கைதி​களின் உடல்​களும் ஒப்​படைக்​கப்​படும். இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நேற்று முன்​தினம் கூட்​டி​னார்.

அந்த நேரத்​தில் பிரதமர் மோடி​யிடம் இருந்து இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு​வுக்கு போன் அழைப்பு வந்​தது. பிரதமர் மோடி​யிடம் பேசுவதற்​காக பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை நெதன்​யாகு நிறுத்​தி​னார்.

இது குறித்து எக்ஸ் தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்​டுள்ள தகவலில், ‘‘எனது நண்​பர் இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு​வுடன் போனில் பேசினேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்​டு​வந்த காசா அமைதி திட்​டத்​தில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றத்​துக்கு வாழ்த்து தெரி​வித்​தேன். காசா மக்​களுக்கு மனி​தாபி​மான உதவி​கள் அதி​கரிப்​ப​தற்​கான ஒப்​பந்​தத்தை வரவேற்​கிறோம். தீவிர​வாதத்தை எந்த உரு​விலும், உலகில் எங்கு நடந்​தா​லும் ஏற்க முடி​யாது’’ என கூறி​யுள்​ளார்.

இஸ்​ரேல் பிரதமர் அலு​வல​கம் எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘பிரதமர் நெதன்​யாகு, இந்​திய பிரதமர் மோடி​யுடன் பேசி​னார். பிணைக்​கை​தி​களை விடு​விப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் எட்​டப்​பட்​டதற்கு பிரதமர் நெதன்​யாகு​விற்​கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரி​வித்​தார்’’ என தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் காசா அமைதி ஒப்​பந்​தத்​துக்கு அனு​மதி அளித்​துள்​ள​தாக​வும், சண்டை நிறுத்​தம் உடனடி​யாக அமலுக்கு வரு​வ​தாக​வும் இஸ்​ரேல் அரசு நேற்று அறி​வித்​தது. இஸ்​ரேல் படைகளும் கா​சா​வில் இருந்து வெளி​யேறும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here