டெல்லி போலி சாமியாரின் சர்வதேச பாலியல் மோசடி அம்பலம்

0
21

டெல்​லி​யில் பிரபல சாமி​யா​ராக இருந்​தவர் சைதன்​யானந்தா பாபா என்று அழைக்​கப்​படும் பார்த்​த​சா​ரதி (62). இவர், பல கோடிகளில் நன்​கொடைகள் பெற்று டெல்​லி​யில் ஏழை சிறுமிகள் மற்​றும் பெண்​களுக்​கான ஆசிரமங்​களை நடத்தி வந்​தார்.

இந்​நிலை​யில் இவர் பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​து​வ​தாக 17 பெண்​கள் டெல்லி போலீ​ஸாரிடம் சமீபத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்து தலைமறை​வான சைதன்​யானந்​தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.​யின் ஆக்​ரா​வில் போலீ​ஸார் கைது செய்​தனர்.

சைதன்​யானந்தாவிடம் இருந்து 3 செல்​போன்​கள், ஒரு ஐபேடு, 2 பாஸ்​போர்ட்​கள் மற்​றும் ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள சொத்​துகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. லண்​டனின் ஒரு வாட்​ஸ்​ஆப் எண்ணை இவர் பயன்​படுத்தி வந்​துள்​ளார்.

இந்த வாட்​ஸ்​ஆப் தகவல் பரி​மாற்​றத்​தில் இவருக்கு அரபு ஷேக்​கு​களு​டன் தொடர்பு இருப்​பதும் அவர்​களுக்கு தனது ஆசிரம பெண்​களை அனுப்பி வந்​ததும் தெரிய​வந்​துள்​ளது. இதன்​மூலம் இவர் சர்​வ​தேச அளவில் பாலியல் மோசடி செய்து வந்​தது உறு​தி​யாகி​யுள்​ளது. அவரது வாட்​ஸ்​ஆப் உரை​யாடல்​களில் இடம்​பெற்ற துபாய் ஷேக்​கு​களை அடை​யாளம் காணும் பணி​யில் போலீ​ஸார் ஈடு​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல்​துறை துணை ஆணை​யர் அமித் கோயல் கூறுகை​யில், “போலி சாமி​யாரின் செல்​போன்​களில் விமானப் பணிப்​பெண்​களின் புகைப்​படங்​கள் மற்​றும் பயோடேட்​டாக்​கள் உள்​ளன.

இளம் பெண்​களுக்கு விமானப் பணிப்​பெண் வேலை வாங்​கித் தரு​வ​தாக உறு​தி​யளித்து அவர்​களை சைதன்​யானந்தா தனது வலை​யில் சிக்க வைத்​திருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. சிறுமிகளுக்கு நகைகள், கைக்​கடி​காரங்​கள் மற்​றும் விலை​யுயர்ந்த கண்​ணாடிகளை பரி​சாக அளித்​ததன் மூலம் அவர்​களின் நம்​பிக்​கையை இவர் பெற்​றுள்​ளார்” என்று தெரி​வித்​தனர்.

தனது ஆசிரமங்​களில் கல்வி நிறு​வனங்​களை​யும் நடத்தி வந்த சைதன்​யானந்​தா​விடம் அவரது நம்​பிக்​கைக்​குரிய பெண்​களும் பணி​யாற்றி வந்​தனர். இவர்​களை​யும் சுற்​றிவளைத்த டெல்லி போலீ​ஸார் இவர்​கள் முன்​பாக சைதன்​யானந்​தா​விடம் விசா​ரிக்க உள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here