வடகிழக்கு மாநிலங்களுக்கு இரட்டை போனஸ்: அருணாச்சலில் ரூ.5,100 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் பெருமிதம்

0
34

அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடை​பெற்ற நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.5,100 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். குறிப்​பாக அருணாச்சல பிரதேசத்​தில் இரு நீர் மின் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் அருணாச்சல பிரதேசத்​தின் தவாங்​கில் 9,820 அடி உயரத்​தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்​க​வும் அவர் அடிக்​கல் நாட்டினார்.

விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: நாட்​டில் முதல் சூரியோத​யம் அருணாச்சல பிரதேசத்​தில் தொடங்​கு​கிறது. ஆனால் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மாநில மக்​களின் வாழ்க்​கை​யில் விடியல் பிறக்​க​வில்​லை. கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதம​ராக பதவி​யேற்​றது முதல் வடகிழக்கு மாநிலங்​களுக்கு முன்​னுரிமை அளித்து வரு​கிறேன். இதன்​காரண​மாக ஒட்​டு மொத்த வடகிழக்​கும் அபரித​மாக வளர்ச்சி அடைந்​திருக்​கிறது. என்னை பொறுத்​தவரை மக்​களே கடவுள்.

கடந்த 10 ஆண்டு கால காங்​கிரஸ் ஆட்​சி​யில் அருணாச்சல பிரதேசத்​தின் வளர்ச்​சிக்​காக ரூ.6,000 கோடி மட்​டுமே செல​விடப்​பட்​டது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் 10 ஆண்டு கால ஆட்​சி​யில் அருணாச்சல பிரதேசத்​தின் வளர்ச்சி திட்​டங்​களுக்​காக ரூ.1 லட்​சம் கோடி செல​விடப்​பட்டு இருக்​கிறது. காங்​கிரஸை​விட பாஜக ஆட்​சிக் காலத்​தில் 16 மடங்கு அதி​க​மாக நிதி வழங்​கப்​பட்டு இருக்​கிறது.

சில ஆண்​டு​களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்​தில் சேலா சுரங்​கப் பாதை திறக்​கப்​பட்​டது. இந்த சுரங்​கப்​பாதை மாநிலத்​தின் அடை​யாள​மாக மாறி​யிருக்​கிறது. மக்​களின் போக்​கு​வரத்து எளி​தாகி உள்​ளது. சுற்​றுலா துறை வளர்ச்சி அடைந்​திருக்​கிறது. இடாநகர் விமான நிலை​யத்​தில் புதிய முனை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. வடகிழக்​கின் 8 மாநிலங்​களை​யும் அஷ்டலட்​சுமி​யாக வழிபடு​கிறேன்.

வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது. அந்த லட்​சி​யத்தை எட்ட ஒவ்​வொரு மாநில​மும் முன்​னேற வேண்​டும். தற்​போது ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் நாடு முழு​வதும் சேமிப்பு திரு​விழா தொடங்கி உள்​ளது. இதனால் அருணாச்சல பிரதேச பெண்​கள் பெரிதும் பயன் அடை​வார்​கள்.

உங்​களது மாதாந்​திர செலவு கணிச​மாக குறை​யும். இந்த நேரத்​தில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு கடைக்​காரரும் சுதேசி பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும். அனைத்து ஒன்​றிணைந்து சுதேசி இயக்​கத்தை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும்.

வடகிழக்கு மக்​களுக்கு பண்​டிகை காலம் ஒரு போனஸாக அமைந்​துள்​ளது. அதோடு ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்​றொரு போனஸாக கிடைத்​திருக்​கிறது. எனவே ஒட்​டுமொத்த வடகிழக்கு மாநிலங்​களுக்​கும் இரட்டை போனஸ் கிடைத்​திருக்​கிறது. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

திரிபுரா மாநிலத்​தின் கோமதி மாவட்​டம், உதய்​பூரில் திரிபுர சுந்​திர கோயில் அமைந்​துள்​ளது. 51 சக்தி பீடங்​களில் ஒன்​றான இந்த கோயில் வளாகம் ரூ.52 கோடி​யில் புனரமைக்​கப்​பட்டு உள்​ளது. புதுப்​பிக்​கப்​பட்ட கோயில் வளாகத்தை பிரதமர்​ நரேந்​திர நேற்​று திறந்​து வைத்​தார்​. திரிபுர சுந்​தரி கோயி​லில்​ சிறப்​பு பூஜை, வழி​பாடுகளை நடத்​தி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here