உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ‘ஆந்த்ராத்’ கடற்படையிடம் ஒப்படைப்பு

0
15

ஆழமற்ற கடற்​பகு​தி​யில் இயங்​கும் நீர்​மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்​பல்​களை (ASW-SWC) கொல்​கத்​தா​வின் ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்டு இன்​ஜினீயர்​ஸ்’ (GRESE) நிறு​வனம் கட்டி வரு​கிறது.

இதில் முதலா​வது போர்க் கப்​பலான ‘அர்​லா​னா’ கடந்த ஜூன் மாதம் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இதையடுத்து இரண்​டாவது போர்க் கப்​பலை (ஆந்த்​ராத்) இந்​திய கடற்​படை​யிடம் அந்த நிறு​வனம் கடந்த சனிக்​கிழமை ஒப்​படைத்​தது.

லட்​ சத்​தீவு தீவுக்​கூட்​டத்​தில் உள்ள ஆந்த்​ராத் தீவிலிருந்து இதற்​கான பெயர் பெறப்​பட்​டுள்​ளது. சுமார் 77 மீட்​டர் நீளம் கொண்ட இந்​தக் கப்​பல்​கள், டீசல் இன்​ஜின்​-​வாட்​டர்​ஜெட் கலவை​யால் இயக்​கப்​படும் மிகப்​பெரிய இந்​திய கடற்​படை போர்க் கப்​பல்​களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here