வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

0
18

 வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு இடங்​களில் மேகவெடிப்பு காரண​மாக பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக கங்​கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழு​மை​யாக வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது.

தொடர் மழை​யால் உத்​த​ராகண்ட் முழு​வதும் மோச​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று மாலை வாராணசி​யில் இருந்து உத்​த​ராகண்ட் தலைநகர் டேராடூனுக்கு விமானத்​தில் சென்​றார். அங்கு மாநில முதல்​வர் புஷ்கர் சிங் தாமி உள்​ளிட்​டோருடன் வெள்​ளம், நிலச்​சரிவு பாதிப்​பு​கள் குறித்து அவர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று அவர் அறி​வித்​தார். மேலும் வெள்ள பாதிப்​பு​களால் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு மத்​திய அரசு சார்​பில் தலா ரூ.2 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி​யும் வழங்​கப்​படும் என்​றும் அவர் அறி​வித்​தார்.

வெள்ள பாதிப்​பு​களால் பெற்​றோரை இழந்த குழந்​தைகளுக்கு பிஎம் குழந்​தைகள் பாது​காப்பு திட்​டத்​தின் கீழ் தேவை​யான உதவி​கள் வழங்​கப்​படும் என்​றும் பிரதமர் உறுதி அளித்​தார். வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேரில் சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். வெள்ள நிவாரண பணி​களில் ஈடு​பட்ட தேசிய, மாநில பேரிடர் படைகளை சேர்ந்த வீரர்​களை அவர் பாராட்​டி​னார்.

வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் உள்​கட்​டமைப்பு வசதி​களை ஏற்​படுத்த மத்​திய அரசு முழு ஆதரவு அளிக்​கும். வீடு​களை இழந்​தோருக்கு சிறப்பு திட்​டத்​தின் கீழ் நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​தார். உத்​த​ராகண்​டில் வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஹெலி​காப்​டரில் ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்​ட​மிட்டு இருந்​தார். ஆனால் மோச​மான வானிலை காரண​மாக அவரது ஹெலி​காப்​டர்​ பயணம்​ ரத்​து செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here