பஹல்காம் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டது எப்படி? – ‘ஆபரேஷன் மகாதேவ்’ குறித்து புதிய தகவல்கள் வெளியீடு

0
143

பஹல்​காம் சம்​பவத்​துக்​குக் காரண​மான 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டது எப்​படி என்​பது குறித்​தும், `ஆபரேஷன் மகாதேவ்’ குறித்த புதிய தகவல்​களை​யும் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஏஐ) வட்​டாரங்​கள் வெளி​யிட்​டுள்​ளன.

கடந்த ஏப்​ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தீவிர​வா​தி​கள் கொடூரத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களை தேடும் பணி​யில் கடந்த 3 மாதங்​களாக இந்​திய ராணுவ​மும் புல​னாய்வு அமைப்​பு​களும் ஈடு​பட்டு வந்​தன.

இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் இந்​திய ராணுவம், சிஆர்​பிஎஃப் மற்​றும் மாநில போலீ​ஸார் இணைந்து நடத்​திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்​கை​யில் 3 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். கொல்​லப்​பட்ட 3 தீவிர​வா​தி​கள் சுலை​மான் என்​கிற ஃபைசல், ஹம்சா அப்​ஹான், ஜிப்​ரான் என அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர்.

இதில், பஹல்​காம் தாக்​குதலுக்கு மூளை​யாகச் செயல்​பட்ட லஷ்கர்​-இ-தொய்​பா​வின் கமாண்​டர் சுலை​மான் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஜிப்​ரான், ஹம்சா அப்​ஹான் இருவரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு சோன​மார்க் சுரங்​கப்​பாதை தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​கள் ஜிப்​ரான் மற்​றும் ஹம்சா அப்​ஹான் என்று அடை​யாளம் காணப்பட்டுள்ளது.

கண்​டறிந்​தது எப்​படி? – இந்​நிலை​யில் ஆபரேஷன் மகாதேவ் மூலம் தீவிர​வா​தி​களை அடை​யாளம் கண்டு கொன்​றது எப்​படி என்​பது குறித்து என்ஏஐ வட்​டாரங்​கள் தகவல்​களை வெளி​யிட்​டுள்​ளன. பஹல்​காம் தாக்​குதலில் ஈடு​பட்ட தீவிர​வா​தி​கள் ஹவாய் செயற்​கைக்​கோள் தொலைபேசி​யை(​சாட்​டிலைட் போன்) பயன்​படுத்தி தகவல்​களைப் பரி​மாறிக் கொண்​டதை இந்​திய அதி​காரி​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர். அவர்​கள் சாட்​டிலைட் போன் வழி​யாகப் பேசி​ய​போது சந்​தேகத்​துக்கு இடமான தகவல்​களை என்ஏஐ அதி​காரி​கள் இடைமறித்​துப் பெற்​றுள்​ளனர்.

தாக்​குதலுக்​குப் பிறகு 3 மாதங்​களாக குறிப்​பிட்ட அந்த சாதனங்​களை தீவிர​வா​தி​கள் பயன்​படுத்​தாமல் இருந்​தனர். அண்​மை​யில்​தான் அந்த சாதனங்​களை அவர்​கள் பயன்​படுத்​தி​யுள்​ளனர். அதன் மூலம் அப்​பகு​தி​யில் லஷ்கர்​-இ-தொய்பா மற்​றும் ஜெய்ஷ் இ முகம்​மது தீவிர​வா​தி​களின் நடமாட்​டம் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. அவர்​களின் தகவல் தொடர்​பு​களை தொடர்ந்து சில நாட்​களாக இந்​திய ராணுவத்​தினர் கண்​காணித்து வந்​தனர்.

பின்​னர் உள்​ளூர் மக்​களை ரகசி​ய​மாக சந்​தித்த இந்​திய ராணுவத்​தினர் அவர்​களுக்கு தீவிர​வா​தி​கள் குறித்த தகவல்​களைக் கொடுத்து கண்​காணித்து தகவல் கொடுக்​கு​மாறு கேட்​டுக் கொண்​டனர். அவர்​கள் கொடுத்த துல்​லி​யத் தகவலின் கீழ் தீவிர​வா​தி​களின் இருப்​பிடம் ராணுவத்​துக்கு கிடைத்​தது. தீவிர​வா​தி​களை, ராணுவம் சுற்றி வளைத்து சரமாரி​யாக சுட்​டுத் தள்​ளி​யுள்ளனர்.

இந்த ஆபரேஷனுக்கு ராணுவத்​தின் ‘4 பாரா சிறப்​புப் படை’ வீரர்​களே தலைமை தாங்​கி​யுள்​ளனர். இந்​திய ராணுவத்​தின் கீழ் இயங்​கும் 4 பாரா சிறப்​புப் படை தீவிர​வாத எதிர்ப்​பு, உளவு பார்த்​தல், தீவிர​வா​தி​களை நேரடி​யாக எதிர்த்து சண்​டை​யிடு​வது போன்ற பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றது.

ஜம்மு – காஷ்மீரில் நடத்​தப்​படும் தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கைகளுக்கு பெரும்​பாலும் இந்த பிரிவையே ராணுவம் பயன்​படுத்தி வரு​கிறது. தீவிர​வாத உள்​கட்​டமைப்​புக்கு எதி​ராக துல்​லிய தாக்​குதல்​களை நடத்​து​வதற்கு பெயர் பெற்ற இந்த பிரிவு​தான் 2016-ல் துல்​லி​யத் தாக்​குதலை (சர்​ஜிக்​கல் ஸ்டிரைக்) பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் நடத்​தி​யது.

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீருக்​குள் நுழைந்​து, தீவிர​வா​தி​களின் முகாம்​களை துல்​லிய​மாக அழித்​த​தில் இந்த பிரி​வின் பங்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது. பஹல்​காம் தீவிர​வாதத் தாக்​குதல் தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் விவாதம் நடை​பெற்று வரும் நிலை​யில் தீவிர​வா​தி​களை பாது​காப்​புப் படை​யினர் அடை​யாளம் கண்​டறிந்து சுட்​டுக் கொன்​றுள்​ளது முக்​கி​யத்​து​வம்​ பெற்​று உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here