ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்கிய மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் மோசடி: டெல்லியில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் கைது

0
101

டெல்​லி​யில் ஆன்​லைனில் தூக்க மாத்​திரை வாங்க நினைத்த மூதாட்​டி​யிடம் ரூ.77 லட்​சம் பறிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ‘டிஜிட்​டல் அரெஸ்ட்’ கும்​பலைச் சேர்ந்த 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகு​தி​யில் வசிப்​பவர் நீரு (62). தனி​யாக வசிக்​கும் இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். அதற்​காக மருத்​து​வர்​கள் பல்​வேறு மருந்​துகளை பரிந்​துரைத்​துள்​ளனர். அத்​துடன் தூக்க மாத்​திரையை​யும் அவர் பயன்​படுத்தி வரு​கிறார்.

இந்​நிலை​யில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தூக்க மாத்​திரை உட்பட தனக்கு தேவை​யான மருந்​துகளை வாங்க இணை​யதளத்​தில் உள்ள பல மருந்து கடைகளை தேடி ஆர்​டர் செய்​துள்​ளார். அதன்​ பிறகு அதை மறந்​து​விட்​டார்.

அதன் ​பிறகு நீரு​வின் தொலைபேசி​யில் ஒரு​வர் பேசி​னார். தன்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதி​காரி என்று அறி​முகப்​படுத்தி கொண்​டார். தடை செய்​யப்​பட்ட போதை மருந்​துகளை வாங்​கிய​தாக​வும் டெல்​லி​யில் போதை பொருட்​களை புழக்​கத்​தில் விடுத்​துள்​ள​தாக​வும் நீரு மீது குற்​றம் சுமத்​தி​னார்.

இதனால் நீரு அதிர்ச்சி அடைந்​தார். பின்​னர், இதில் இருந்து தப்​பிக்க வேண்​டு​மா​னால் வங்கி கணக்கை சரி பார்க்க பணத்தை அனுப்ப வேண்​டும். இல்​லா​விட்​டால் கைது செய்​வோம் என்று அந்த போலி அதி​காரி மிரட்​டி​யுள்​ளார். பயந்து போன நீரு முதலில் ரூ.3 லட்​சம் அனுப்பி உள்​ளார்.

பத்து நாட்​கள் கழித்து மீண்​டும் ஒரு​வர் பேசி​னார். அவரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதி​காரி என்று அறி​முகப்​படுத்தி கொண்​டார். நீரு​வின் பணத்தை மீட்டு தரு​வ​தாக கூறி முதலில் ரூ.20 ஆயிரத்தை அனுப்​பி​யுள்​ளார். அதனால் நீரு​வுக்கு அந்த நபர் மீது நம்​பிக்கை வந்​தது. அதை தொடர்ந்து 2 நாட்​கள் கழித்து வீடியோ அழைப்​பில் 4 பேர் வந்​தனர். அவர்​களில் ‘அந்த நம்​பிக்​கைக்கு உரிய அதி​காரி’​யும் இருந்​தார்.

அவர்​கள் அனை​வரும் சேர்ந்து மிரட்டி நெட் பேங்​கிங் தகவல்​களை நீரு​விடம் இருந்து வாங்​கி​யுள்​ளனர். அதன் ​பிறகு சிறிது நேரத்​தில் அடுத்​தடுத்து ரூ.5 லட்​சம், ரூ.10 லட்​சம் என நீரு​வின் வங்​கிக் கணக்​கில் இருந்து பணம் கழிந்து கொண்டே சென்​றது. இது​போல் மொத்​தம் 77 லட்​சத்தை அந்த கும்​பல் பறித்​துக் கொண்​டது.

இதையடுத்து செப்​டம்​பர் 24-ம் தேதி டெல்லி சிறப்பு பிரிவு போலீ​ஸில் நீரு புகார் அளித்​தார். சிறப்பு பிரிவு ஏசிபி மனோஜ் குமார், எஸ்ஐ கரம்​வீர் ஆகியோர் இதுகுறித்து தீவிர விசா​ரணை நடத்தி வந்​தனர்.

ஒன்​பது மாதங்​களுக்​குப் பிறகு டெல்லி முகர்ஜி நகரில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசிக்​கும் அகிலேஷ் என்​பவரை கைது செய்​தனர். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு தகவல்​கள் கிடைத்​தன. அதன் அடிப்​படை​யில், ஹரி​யா​னா​வில் அம்​ஜத், ஷாகித், ஷகில், ஹமித் ஆகிய 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இது​வரை அந்த கும்​பலிடம் இருந்து ரூ.3 லட்​சத்தை போலீ​ஸார் மீட்டு நீரு​விடம் ஒப்​படைத்​துள்​ளனர். கைது செய்​யப்​பட்ட 5 பேரின் மொபைல் போன்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்து ஆய்வு செய்​தனர். அப்​போது மேலும் பலரிடம் இது​போல் பணம் பறித்துள்ளது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து தொடர்ந்​து வி​சா​ரணை நடத்​தப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here