நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் 2-ம் நாளாக அமளி

0
111

 நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்​சினை​களை எழுப்பி மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு அவைகளும் முடங்​கின.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்​போது பஹல்​காம், ஆபரேஷன் சிந்​தூர், விமான விபத்து தொடர்​பான விவ​காரங்​களை மக்​களவை​யில் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அதோடு பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு எதிர்ப்பு தெரி​வித்து கோஷமிட்​டனர்.

இதனால் பகல் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அப்​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தில் ஒன்றுகூடி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். மீண்​டும் மக்​களவை கூடிய​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர்ந்து கோஷமிட்​டனர். இதன் காரண​மாக நாள் முழு​வதும் மக்​களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மாநிலங்​களவை​யிலும் அதே பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. எதிர்க்​கட்​சிகளின் அமளி​யால் இரண்டாவது நாளாக நா​டாளு​மன்​றத்​தின்​ இரு அவை​களும்​ முடங்​கின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here