நல்ல திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது உண்டு: நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

0
177

நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்டு என சென்னையி​லிருந்து ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலாகி செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரி​வித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்​கும், விவேக்​கு​மார் சிங் மத்திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்​கும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா தலை​மை​யில் நடை​பெற்​றது.

இடமாறு​தலாகி செல்​லும் இரு நீதிப​தி​களை​யும் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வாழ்த்​திப் பேசுகை​யில், “சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் அனு​ம​திக்​கப்​பட்ட நீதிப​தி​களின் மொத்த பணி​யிடங்​கள் 75. கடந்த 7 மாதங்​களில் மட்​டும் 12 நீதிப​தி​கள் பணி ஓய்வு பெற்​று​விட்​டனர். இப்​போது 2 நீதிப​தி​கள் இடமாறு​தலில் செல்​கின்​றனர். தற்​போது 56 நீதிப​தி​கள் மட்​டுமே பணி​யில் உள்​ளனர். 19 நீதிபதி பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இந்​தப்பணி​யிடங்​களை விரை​வில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்​றார்.

துளியும் மகிழ்ச்சி இல்லை: நீதிபதி விவேக்​கு​மார் சிங் நன்றி தெரி​வித்து பேசுகை​யில், “பாரம்​பரியமிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணி​யாற்​றி​விட்டு மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலில் செல்​வ​தில் எனக்கு துளி​யும் மகிழ்ச்சி இல்​லை.

எதற்​காக என்னை அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​திலிருந்து சென்​னைக்கு மாற்​றி​னார்​கள் என்​பதும், தற்​போது சென்​னையி​லிருந்து மத்​திய பிரதேசத்​துக்கு மாற்​றி​யுள்​ளார்​கள் என்​பதும் எனக்கு தெரி​யாது. ஆனால் சென்​னை​யில் பணி​யாற்​றிய அனுபவம் வித்தியாச​மானது. அந்த நீங்​காத நல்ல நினை​வு​களு​டன் மத்​திய பிரதேசம் செல்​கிறேன்” என்​றார்.

இதே​போல ஆந்​தி​ரா​வுக்கு செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் பேசுகை​யில், “நீ​திப​தி​கள் இடமாற்​றம் என்​றாலே அவர்​கள் மீது ஏதாவது குறை கண்​டு​பிடிப்​பதும், ஊழல், வேண்​டப்​பட்​ட​வர்​களுக்​காக தீர்ப்பு போன்​றவற்​றுக்​காக மாற்​றம் செய்யப்பட்டுள்ளதாக கருதும் மனப்​பான்மை பெரும்​பாலும் உள்​ளது.

ஆனால் நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்​டு. இவ்​வாறு அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​பவர்​களுக்கு பல உயர் நீதி​மன்​றங்​களில் பணி​யாற்​றிய அனுபவம் கிடைக்​கும். அவர்​கள்​தான் பின்​னாளில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களாக​வும் பணி​யமர்த்​தப்​படு​கின்​றனர்.

சிறப்பான அனுபவம்: அந்த வகை​யில் எனக்​கும் மிகச்​சிறப்​பான அனுபவம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கிடைத்​தது. யாருக்கும், எதற்​கும் பயமின்றி துணிச்​சலுடன் எனது பணியை நேர்​மை​யுடன், நியாய​மாக செய்​துள்​ளேன் என நம்​பு​கிறேன். எனது சொந்த மாநிலத்​துக்கு என்னை இடமாறு​தல் செய்​துள்ள உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு எனது நன்​றி” என்​றார்.

முன்​ன​தாக நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செய்​தார்.

அப்​போது தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.மோக​னகிருஷ்ணன், செய​லா​ளர் ஆர்​.கிருஷ்ணகு​மார்​, வழக்​கறிஞர்​ எம்.பழனிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here