அருமனை அருகே செறியகொல்லா பகுதியை சேர்ந்தவர் ரோபின் (46) கொத்தனார். இவர் நேற்று காலை பிறகு சேகரிப்பதற்காக மாங்கோடு பகுதிக்கு வந்தார். அங்கு விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ரோபினை மீட்டு சிகிச்சைக்காக காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரோபின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு ரோபின் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160...
பார்வதிபுரம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி...
கப்பியறை: அரசு சுகாதார நிலைய கட்டிடம் ; எம்எல்ஏ அடிக்கல்
கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான...