குளச்சல்: துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு; மீனவர்கள் கவலை

0
215

குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் உயர்ரக மீன்களான இரால், கணவாய் சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். இந்த வகையில் கடந்த சில நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் மீன்வரத்து குறைந்து காணப்படுகிறது. தற்போது கணவாய், சிறிய இரால் எனப்படும் புல்லன்கேரன் மீன்களின் சீசனாகும். ஆனால் இந்த மீன்கள் தற்போது கிடைக்கவில்லை. இன்று கட்டுமரங்கள், வள்ளங்களின்கூட வழக்கமான நெத்திலி, சாளை மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்பிரியர்கள் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here