முஞ்சிறை: மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்த இளம் பெண் மாயம்

0
209

முஞ்சிறை பகுதி செறுவாதோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவகுமார் மகள் சரண்யா. எஸ். குமார் (23). டி பார்ம் முடித்த இவர் முஞ்சிறையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 

இதையடுத்து சரண்யா பெற்றோர் அவரை உறவினர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மாயமான மகளை கண்டுபிடித்து தர கேட்டு சிவகுமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சரண்யா. எஸ். குமார் காதல் பிரச்சனையால் மாயமானாரா? வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here