கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடி காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், மாவட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த ஆண்டு மட்டும் 800 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.














