தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு 5.67 கோடி கணக்கீட்டு படிவங்கள் விநியோகம்

0
10

தமிழகம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை மேற்கொள்​ளப்​படு​கிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளன.

வாக்குச்​சாவடி நிலை அலுவலர்கள் 68,467, வாக்குச்​சாவடி நிலை முகவர்கள் 2,11,445. அச்சடிக்​கப்பட்ட கணக்கீட்டு படிவங்​களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582 (100 சதவீதம்). விநியோகிக்​கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் எண்ணிக்கை 5 கோடியே 67 ஆயிரத்து 45 (78.09 சதவீதம்) என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்​துள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்​குறிப்​பில், “வாக்​குச்​சாவடி நிலை முகவர்களை நியமிப்​ப​தற்கான மாற்றியமைக்​கப்பட்ட அறிவுறுத்​தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்​டுள்ளது. பொதுவாக, வாக்காளர் பட்டியலின் குறிப்​பிட்ட பாகத்தில் பெயர் பதிவுசெய்​யப்பட்ட வாக்காளர் ஒரு வாக்குச்​சாவடி நிலை முகவராக இருப்​பார்.

இப்போது, வாக்காளர் பட்டியலின் குறிப்​பிட்ட பாகத்தில் பெயர் பதிவு செய்த வாக்குச்​சாவடி நிலை முகவர் கிடைக்காத பட்சத்​தில், அதே சட்டப்​பேரவை தொகுதியில் பெயர் பதிவுசெய்​யப்பட்ட எந்தவொரு வாக்காளரும் வாக்குச்​சாவடி நிலை முகவராக நியமிக்​கப்​படலாம்.

அவ்வாறு நியமிக்​கப்பட்ட வாக்குச்​சாவடி நிலை முகவர் தனது நியமிக்​கப்பட்ட பகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்​களின் பதிவுகளை அடையாளம் காணும் பொருட்டு. ஆய்வு செய்வதற்கு முற்படுவர். தமிழகத்தில் 2,11,445 வாக்குச்​சாவடி நிலை முகவர்கள் அங்கீகரிக்​கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்” என்று தெரிவித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here