சத்தீஸ்கரில் 6 பெண்கள் உட்பட 10 நக்சலைட்கள் சரண்

0
17

சத்​தீஸ்​கரில் 6 பெண்​கள் உட்பட 10 நக்​சலைட்​கள் நேற்று சரண் அடைந்​தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கிரண் சவான் நேற்று கூறிய​தாவது:

அரசின் மறு​வாழ்வு திட்​டத்​தின் கீழ் போலீஸ், சிஆர்​பிஎப் மற்​றும் மாவட்ட அதி​காரி​கள் முன்​னிலை​யில் நக்​சலைட்​கள் சரண் அடைந்​தனர். இவர்​களை பற்​றிய தகவலுக்கு மொத்​தம் ரூ.33 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​களை இவர்​கள் ஒப்​படைத்​துள்​ளனர். இதன் மூலம் இம்​மாவட்​டத்​தில் இந்த ஆண்டு மொத்​தம் 263 மாவோ​யிஸ்ட்​கள் வன்​முறையை கைவிட்​டுள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here