குமரி கடற்கரையில் மாற்றுதிறனாளியாக நடித்து யாசகம் பெற்ற நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் வாலிபர் ஒருவர் தனது இரு கைகளையும் இழந்த நிலையில் யாசகம் பெற்று கொண்டிருந்தார், அப்போது ஒரு நபர் அவருக்கு பணம் கொடுத்துவிட்டு சென்றார், பின்னர் ஊனம் என நினைத்த இந்த வாலிபர் திடீரென தனது சட்டையில் மறைத்து வைத்த இரு கைகளை நீட்டி பணத்தை எடுத்த வீடியோ வைரலாகி உள்ளது.