டபிள்யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் இன்று தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.
இந்தியாவில் ஆடருவருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரைப் போலவே மகளிருக்கும் டபிள்யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) உருவாக்கப்
பட்டது. 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தத் தொடரின் நான்காவது சீசன் இன்று தொடங்கவுள்ளது.மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ்,யுபி வாரியர்ஸ்,டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் களம் காண்கின்றன.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு முறையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன. இப்போட்டிகள் ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.முதல் 11 ஆட்டங்கள் மும்பையிலும் அடுத்த 11 ஆட்டங்கள் வதோதராவிலும் நடைபெற உள்ளன. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற உள்ளது. 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டதாக இருக்கும்.
நவிமும்பையிலுள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்கப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலையாக காணலாம்.மேலும், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டுமே கிடைக்கும்.



