மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம்

0
13

பொள்​ளாச்சி கிணத்​துக்​கடவை சேர்ந்த பெண்​ணின் மகளிர் உரிமைத்​தொகை, உத்தர பிரதேசத்​தில் வசிக்​கும் பெண்​ணின் வங்​கிக் கணக்​குக்கு 2 ஆண்​டு​களாக அனுப்​பப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. கோவை மாவட்​டம் கிணத்​துக்​கடவு கொண்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் மகேஸ்​வரி (50). இவர் 2 ஆண்​டு​களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்​தொகை பெற விண்​ணப்​பித்​தார். விண்​ணப்​பம் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டதற்​கான எந்த குறுஞ்​செய்​தி​யும் வராத​தால், விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தாக கரு​தி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், கிணத்​துக்​கடவு ஒன்​றி​யத்​தில் ஜூலை 25-ம் தேதி நடந்த ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாமில் மீண்​டும் மகளிர் உரிமைத்​தொகை கோரி விண்​ணப்​பித்​துள்​ளார். மனுவை ஆய்வு செய்த அதி​காரி​கள், “உங்​களுக்கு 2 ஆண்​டு​களாக மகளிர் உரிமைத்​தொகை வழங்​கப்​படு​கிறது. வங்​கிக் கணக்கை சரி​பாருங்​கள்” எனக் கூறினர்.

இதையடுத்​து, கிணத்​துக்​கடவு பரோடா வங்​கி​யில் மகேஸ்​வரி விசா​ரித்​தார். ஆய்வு செய்த வங்கி ஊழியர்​கள், மகேஸ்​வரி​யின் ஆதார் எண்​ணுடன், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாந்​திதேவி என்​பவரது வங்கி கணக்கு இணைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், அவரது வங்​கிக் கணக்​குக்கு மகளிர் உரிமைத்​தொகை மாதந்​தோறும் செல்​வ​தாக​வும் தெரி​வித்​தனர்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த மகேஸ்​வரி, பொள்​ளாச்சி சார் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் மனு அளித்​தார். இதுகுறித்து கிணத்​துக்​கடவு தாலுகா சமூகப் பாது​காப்பு திட்ட வட்​டாட்​சி​யர் பானு​மதி கூறும்​போது “மகளிர் உரிமைத்​தொகை சென்​னை​யில் இருந்து பயனாளர்​களின் வங்​கிக் கணக்​கு​களுக்கு அனுப்​பப்​படு​கிறது. மகேஸ்​வரி​யின் வங்​கிக் கணக்​கில் உரிமைத்​தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here