விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மேல்புறம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாததால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேல்புறம் சந்திப்பிலிருந்து 3 வழித்தடங்களுக்கு பேருந்து சேவையை நேற்று தாரகை கத்பட் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.














