தமிழக முதல்வருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

0
18

தமிழகத்​தில் 2011-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்​டார். அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்​டார்.

அப்​போது, தேர்​தல் ஆணை​யம் நிர்​ண​யித்த தொகைக்கு அதி​க​மாக ஸ்டா​லின் செலவு செய்​ததுடன், அதி​கார துஷ்பிரயோகத்​தி​லும் ஈடு​பட்​ட​தால், கொளத்​தூர் தொகு​தி​யில் ஸ்டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும் என்று சைதை துரை​சாமி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​இருந்​தார்.

இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று விசா​ரித்​தது. தமிழக முதல்​வர் ஸ்டா​லின் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல், “மனு​தா​ரர் தெரிவிக்​கும் குற்​றச்​சாட்​டுகளுக்கு ஆதா​ரங்​கள் இல்​லை.

வாக்​காளர்​களுக்கு பணம் விநி​யோகம் செய்​ததற்​கான குற்​றச்​சாட்டை சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​க​வில்​லை. இதைக் கருத்​தில் கொண்​டே, உயர் நீதி​மன்​றம் சைதை துரை​சாமி​யின் மனு​வைத் தள்​ளு​படி செய்​துள்​ளது” என்று வாதிட்​டார்.

சைதை துரை​சாமி சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ்​.​நா​யுடு, “கொளத்​தூர் தொகு​தி​யில் வாக்​காளர்​களுக்கு நவீன முறை​யில் பணப்பட்​டு​வாடா செய்​ததற்​கான ஆதா​ரங்​கள் உள்​ளன.

உயர் நீதி​மன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்​டும்” என்று வாதிட்​டார். இரு தரப்பு வாதங்​களை கேட்ட உச்ச நீதி​மன்ற அமர்​வு, இரு தரப்​பும் எழுத்​துப்​பூர்வ வாதங்​களை வரும் புதன்​கிழமைக்​குள் தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டு, தேதி குறிப்​பி​டா​மல் தீர்ப்பை தள்​ளிவைத்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here