பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலங்கானா சட்டப்பேரவையில் தொடர்ந்து 3-வது நாளாக பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபுவின் பரிந்துரையின் பேரில், பேரவைத் தலைவர் பிரசாத் குமார் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் உள்ளிட்ட 22 பிஆர்எஸ் எம்எல்ஏக்களையும் இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
