டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணி சாம்பியன்!

0
156

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கலில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. துஷார் ரஹேஜா 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், அதித் சாத்விக் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் விளாசினர்.

222 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணி​யானது 14.4 ஓவர்​களில் 102 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதுல் விட்​கர் 24, ஹன்னி சைனி 17, வெங்​கடேஷ் புவனேஷ்வர் 12, விமல் குமார் 10 ரன்​கள் சேர்த்​தனர். கேப்​டன் அஸ்​வின் (1) உட்பட மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை.

திருப்​பூர் அணி சார்​பில் ரகுபதி சிலம்​பரசன், மோகன் பிர​சாத், இசக்கி முத்து ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 118 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சாய் கிஷோர் தலைமையிலான திருப்​பூர் தமிழன்ஸ் அணி முதன்​முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. அந்த அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here