வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 26 வயது எலக்ட்ரீசியன் ஆஸ்பின் நிக்சன், நேற்று முன்தினம் ஜிஜோவுடன் பைக்கில் சென்றபோது காட்டாத்துறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் ஆஸ்பின் நிக்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தக்கலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தக்கலை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
