Home கன்னியாகுமரி செய்திகள் திங்கள்நகர்: ஆபத்தான மழை நீர் ஒடை மூட கோரிக்கை

திங்கள்நகர்: ஆபத்தான மழை நீர் ஒடை மூட கோரிக்கை

0

திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான மார்ஷல் நேசமணி பூங்காவை சீரமைக்க அம்ருத் 2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணிகள் நடந்தது. மேலும் பூங்கா மழை நீர் ஓடையை சீரமைக்க தனியாக ஒரு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்தது. 

ஓடை மேலே கான்கிரீட் நடைபாதை போடப்பட்டு, 24 இடங்களில் 2 அடி தூரம் சதுர அளவில் இடம் விடப்பட்டு, திறந்த நிலையில் காணப்படுகிறது. இப்பகுதியில் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் தினம் நடந்து செல்கின்றனர். அதுபோல் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்பவர்களும் இந்த நடைபாதையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் நடந்து செல்பவர்கள் ஓடையில் தவறி விழும் சம்பவம் நடந்து வருகிறது. 

குறிப்பாக இரவு மற்றும் மழை நேரங்களில் இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு 24 திறந்தவெளி ஓடைகளையும் கனமான இரும்பு மூடிகள் கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version