கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார். வனவிலங்கு நடமாட்டம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே மின் வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
