தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் – தாக்கம் எப்படி?

0
21

பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்​திய நாடு தழு​விய வேலை நிறுத்​தப் போராட்​டத்​தால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்​கை​யில் பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை.

தொழிலா​ளர் விரோத சட்​டங்​களை திரும்​பப் பெற வேண்​டும், மகாத்மா காந்தி கிராமப்​புற வேலை ​வாய்ப்பு உறுதி திட்​டத்தை மீண்​டும் செயல்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்கைகளை வலி​யுறுத்தி தொழிற்​சங்​கங்​கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்​டம் நடத்​தப் போவ​தாக அறிவித்திருந்​தது. அதன்​படி பல்வேறு தொழிற் சங்​கங்​களின் வேலை நிறுத்த போராட்​டம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்த போராட்​டத்​தால் நாடு முழு​வதும் சகஜ​மான நிலையே இருந்தது. மக்​களின் இயல்பு வாழ்க்​கைக்கு எந்​த​விதப் பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. அதே​நேரத்​தில் ஒடி​சா, கேரளா, தமிழ்​நாடு, கோவா, ஜார்க்​கண்ட், சத்​தீஸ்​கர், மத்​திய பிரதேசம், பஞ்​சாப் ஆகிய மாநிலங்​களில் நாடு தழு​விய வேலை நிறுத்​தப் போராட்டத்துக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்​தது. ஒடி​சா, கேரளா ஆகிய மாநிலங்​களில் பேருந்து போக்​கு​வரத்து தடைபட்​ட​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர்.

ஒடி​சா​வில் நடை​பெற்ற 12 மணி நேர போராட்​டத்​தால் மக்​களின் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்கு பாதிக்​கப்​பட்​டது. இங்கு பொதுப் போக்​கு​வரத்து முடங்​கியது. மார்க்​கெட்​கள், கல்வி நிறு​வனங்​கள், வணிக நிறு​வனங்​கள், கடைகள் மூடப்​பட்​டிருந்​தன.

அதே​போல் கேரள மாநிலத்​தில் தொழிற்​சங்​கங்​களின் 24 மணி நேர வேலை நிறுத்​தம் நேற்று முன்​தினம் நள்​ளிரவே தொடங்கியது. ஐக்​கிய விவ​சா​யிகள் முன்​னணி, விவ​சாய தொழிலா​ளர் அமைப்​பு​கள், சிபிஎம், சிபிஐ உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகள் வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இத​னால் மாநிலம் முழு​வதும் அரசு பேருந்​துகள் இயக்கப்படவில்லை. அதைப் போலவே தனி​யார் பேருந்​துகளும் இயங்​க​வில்​லை. ஆட்​டோ, டாக்​ஸிகளும் இயங்​க​வில்​லை. கடைகள், வர்த்தக வளாகங்​கள் மூடப்​பட்​டிருந்​தன. இதனால் மாநிலம் முழு​வதும் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்​பட்​டது. கொச்​சி, திரு​வனந்​த​புரம், கோழிக்​கோடு உள்ளிட்ட பகு​தி​களில் வேலை நிறுத்​தம் வெற்றி பெற்​றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here