தவெக நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராக கரூர் ஆட்சியருக்கும் சம்மன்

0
12

தவெக கூட்ட நெரிசல் விசா​ரணை தொடர்​பாக டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிச.29) நடை​பெற உள்ள விசா​ரணைக்கு ஆஜராக கரூர் ஆட்​சி​யருக்​கும் சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது.

கரூரில் நடை​பெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்தை சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்த வழக்​கில், டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிச.29) நடை​பெறும் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், தேர்​தல் மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, மாநில இணைச் செய​லா​ளர் சிடிஆர்​.

நிர்​மல்​கு​மார், கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், காவல் கண்​காணிப்​பாளர் ஜோஷ் தங்​கை​யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன், டிஎஸ்பி செல்​வ​ராஜ், கரூர் நகர ஆய்​வாளர் ஜி.மணிவண்​ணன் ஆகியோ​ருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூர் ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் இன்று டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதையடுத்​து, நேற்று முன்​தினம் அவர் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here