தலக்குளம்: குளங்களில் மீன் வளர்ப்பு

0
295

குமரி மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையின் மூலம் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிபெருமாள் குளத்தில் உள்நாட்டு கெண்டை மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி நேற்று 15ஆம் தேதி நடந்தது. பத்மநாபபுரம் உதவி கலெக்டர் வினய்குமார் மீனா தொடங்கி வைத்தார். தொடர்ந்து தலகுளம் மற்றும் காக்கோட்டு தலை ஊராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட 10 குளங்களில் 14 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் கன்னியாகுமரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விர்ஜில் கிராஸ், குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் ராஜேஷ், தலக்குளம் ஊராட்சித் தலைவர் டாக்டர் லட்சுமி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here