தக்கலை பாரதிநகரை சேர்ந்த துணை சர்வேயர் வேல்முருகன் மகளுக்கு வங்கி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, சென்னையை சேர்ந்த விஜய் மற்றும் ரூபஸ் இஸ்ரேல் தாமஸ் ஆகியோர் ரூ 12 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். ஒரு வருடமாகியும் வேலை வாங்கி கொடுக்காததால், வேல்முருகனின் மனைவி காளீஸ்வரி தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.