ஹைதராபாத் அருகே பயங்கர சாலை விபத்து: அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் உயிரிழப்பு

0
15

 ஹைத​ரா​பாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத் அடுத்​துள்ள ரங்​காரெட்டி மாவட்​டம், தாண்​டூரு​விலிருந்து நேற்று அதி​காலை 4.40 மணிக்கு தெலங்​கானா அரசு பேருந்து ஹைத​ரா​பாத் நோக்கி புறப்​பட்​டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்​தில் 72 பேர் பயணம் செய்​தனர்.

சரி​யாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்​ஜகூடா எனும் இடத்​தில், ஜல்லி கற்​களை ஏற்​றிக்​கொண்டு அதிவேக​மாக எதிரே வந்த டிப்​பர் லாரி, அரசு பேருந்​தின் ஓட்​டுநர் உள்ள வலது புறம் மோதி, பேருந்​தின் மீதே கவிழ்ந்​தது. அப்​போது, டிப்​பர் லாரி​யில் இருந்த ஜல்லி கற்​கள் முழு​வதும் பேருந்​துக்​குள் விழுந்​தது. இந்த கோர விபத்தில் இரு வாகன ஓட்​டுநர்​கள், 10 பெண்​கள், 11 மாத குழந்​தை, 8 ஆண்​கள் என மொத்​தம் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

அந்த நேரத்​தில் 12 போலீ​ஸார் பயிற்​சிக்​காக ஒரு வேனில் ஹைத​ரா​பாத் நோக்கி சென்று கொண்​டிருந்​தனர். அவர்​கள் இந்த விபத்தை பார்த்​ததும், ஓடி சென்​று, மீட்பு பணி​யில் இறங்​கினர்.

போலீ​ஸாருக்​கும் தகவல் கொடுத்​தனர். மேலும், அப்​பகுதி மக்​கள் பலர் ஓடி வந்து மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர். ஜல்லி கற்​களை அகற்​றி, அதில் சிக்​கி​யிருந்த பலரது உடல்​களை மீட்​டனர். கிரேன் உதவியோடு டிப்​பர் லாரி அகற்​றப்​பட்​டது.

தெலங்​கானா அரசு சார்​பில் உயி​ரிழந்த பயணி​கள் 19 பேரின் குடும்பங்களுக்கு (ஓட்​டுநர்​கள் இல்​லாமல்) தலா ரூ.5 லட்​சம் நிதி உதவியை​யும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியை​யும் அரசு வழங்​கும் என அமைச்​சர் பொன்​னம் பிர​பாகர் அறி​வித்​தார். மேலும், போக்​கு​வரத்து கழகம் சார்​பில் இறந்​தவர்​கள் குடும்​பத்​துக்கு தலா ரூ.2 லட்​சம் நிதி உதவி வழங்​கப்​படும் எனவும் அமைச்​சர்
தெரி​வித்​தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்​ததும், குடியரசு தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் நரேந்​திர மோடி​ ஆகியோர் இரங்கல் தெரி​வித்​தனர். மேலும், இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.2 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிர​மும் நிதி உதவி வழங்​கு​வ​தாக​வும் பிரதமர் தெரி​வித்​தார்.

தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நா​யுடு, முன்​னாள் முதல்​வர் கே. சந்​திரசேகர ராவ், ஆந்​திர துணை முதல்​வர்​ பவன்​ கல்​யாண்​ உள்​ளிட்​டோரும்​ தங்​களின்​ ஆழ்ந்​த இரங்​கலைத்​ தெரிவித்​துள்​ளனர்​

பெற்றோரை இழந்த 2 மகள்கள்: இந்த விபத்தில் விகாராபாத் மண்டலம், ஹாஜிப்பூரை சேர்ந்த தாய், தந்தை இருவரையும் இழந்த 2 மகள்கள் கதறி அழுதனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here