காட்பாடியில் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடியில் கோயில்: கும்பாபிஷேக விழா நடத்திய முரட்டு பக்தர்

0
19

முன்​னாள் முதல்​வர் மறைந்த எம்​ஜிஆருக்கு காட்பாடியில் ரூ.3 கோடி​யில் கோயில் கட்​டப்​பட்​டு நேற்று கும்​பாபிஷேக விழா நடை​பெற்​றது.

வேலூர் மாவட்​டம் காட்பாடி அடுத்த கரசமங்​கலத்​தில் மும்மத அடை​யாளங்​களு​டன் முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆருக்கு ரூ.3 கோடி செல​வில் கோயில் கட்​டப்​பட்​டுள்​ளது.

 ராமச்​சந்​திரா அறக்​கட்​டளை​யின் நிர்​வாகி டி.ஆர்​.​முரளி சார்​பில் கட்​டப்​பட்​டுள்ள இக்​கோயி​லின் கோபுரங்​கள் இந்​து, கிறிஸ்​தவம், இஸ்​லாம் ஆகிய மும்​மதங்​களை அடை​யாளப்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், கோயிலுக்​குள் ரூ.17 லட்​சம் மதிப்​பில் ஐம்​பொன்​னாலான எம்​ஜிஆரின் முழு உரு​வச்சிலை​யும் நிறு​வப்​பட்​டுள்​ளது. இந்த கோயில் கும்​பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசை​யாக நடை​பெற்​றது.

இதையொட்​டி, கடந்த இரண்டு நாட்​களாக யாக சாலைகள் அமைத்து விக்​னேஷ்வர பூஜை, வருண பகவான் பூஜை, வாஸ்து சாந்​தி, கணபதி ஹோமம் உள்​ளிட்ட ஹோமங்​கள் நடை​பெற்​றன.

நேற்று அதி​காலை இரண்​டாம் கால பூஜை நடை​பெற்​றது. காலை 9.30 மணி​யள​வில் கோபுரத்​துக்​கும், எம்​ஜிஆர் சிலைக்​கும் புனித நீர் ஊற்​றப்​பட்டு கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. தொடர்ந்​து,

எம்​ஜிஆர் சிலைக்​குச் சிறப்​புப் பூஜைகளும் நடை​பெற்​றன. இதில், சென்னை முன்​னாள் மேயர் சைதை துரை​சாமி, தொழில​திபர் சேகர் ரெட்​டி, பொது​மக்​கள் மற்​றும் எம்​ஜிஆர் ரசிகர்​கள்​ பலர்​ பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here