‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு- ரிஷப் ஷெட்டி விளக்கம்

0
19

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்​துள்ள ‘கந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் நாளை வெளி​யாகிறது. இந்​தப் படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடந்​த​போது, ரிஷப் ஷெட்​டி, கன்​னடத்​தில் பேசி​னார். அப்​போது​தான் என் மனதில் இருப்​பதை வெளிப்​படை​யாகப் பேச முடி​யும் என்​றார். இதற்​குத் தெலுங்கு ரசிகர்​கள் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்​து​கொண்டே அவர் பேசாமல் சென்​று​விட்​டார் என்று அவர்​கள் கூறி வரு​கின்​றனர்.

ஏற்​கெனவே பவன் கல்​யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளி​யீட்​டின் போது சில கன்னட அமைப்​பு​கள் பெங்​களூரில் எதிர்ப்​புத் தெரி​வித்​ததை​யும் ஒப்​பிட்​டு, ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தைப் புறக்​கணிப்​போம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை ​தளத்​தில் உரு​வாக்​கி​யுள்​ளனர். இது டிரெண்​டானது.

இந்​நிலை​யில், மும்​பை​யில் நடந்த புரமோஷன் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்​டி​யிடம் இதுபற்றி கேட்​ட​போது, “பு​திய மொழிகளைக் கற்​றுக் கொள்​வதை உண்​மை​யிலேயே விரும்​பு​கிறேன். ஏனென்​றால் நாங்​கள் ஒரு இடத்​துக்​குச் செல்​லும்​போது அவர்​கள் மொழி​யில் பேசி​னால் அது மரி​யாதையைக் காட்​டு​கிறது. அதனால்​தான் மொழி கற்​பதை எப்​போதும் முயற்​சிக்​கிறேன். ஒரு கன்​னட​ராக நான் பெரு​மை கொள்​கிறேன். என் சொந்த மொழிக்கு நான் எவ்​வளவு அன்​பை​யும் மரி​யாதையை​யும் கொடுக்​கிறேனோ, அதை மற்ற மொழிகளுக்​கும் கொடுக்க வேண்​டும் என்​பது என் நம்​பிக்​கை. இந்​தி​யா​வில் பல்​வேறு மொழி, கலாச்​சா​ரம். நம்​பிக்​கைகள் உள்​ளன. ஆனால் அனைத்​தின் மைய​மும் ஒன்​றே. அதனால்​தான் மற்​றொரு மொழியைக் கற்​றுக் கொள்​வது மகிழ்ச்சி அளிக்​கிறது” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here