தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது

0
20

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 201 ரன்​களும், விமல் குமார் 189 ரன்​களும் விளாசினர்.

இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 127 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 365 ரன்​கள் எடுத்​தது. தேகா நிஸ்​சல் 161 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 115 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய நாகாலாந்து அணி 157.4 ஓவர்​களில் 446 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தேகா நிஸ்​சல் 175 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 146 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.

தமிழ்​நாடு அணி தரப்​பில் குர்​ஜப்​னீத் சிங் 5, சந்​திரசேகர் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். நாகாலாந்து அணி இன்​னிங்ஸ் முடிவடைந்​ததும் ஆட்​டத்தை டிரா​வில் முடித்​துக்​கொள்ள இரு அணி​களின் கேப்​டன்​களும் சம்​மதம் தெரி​வித்​தனர். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​றதன் மூலம் தமிழ்​நாடு அணிக்கு 3 புள்​ளி​கள்​ வழங்​கப்​பட்​டது.

பெங்​கால் வெற்றி: பெங்​கால் – குஜ​ராத் அணி​கள் இடையி​லான போட்டி கொல்​கத்​தா​வில் நடை​பெற்​றது. கடைசி நாளான நேற்று 327 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த குஜ​ராத் அணி 45.5 ஓவர்​களில் 185 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான உர்​வில் படேல் 124 பந்​துகளில் 16 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். அவருக்கு அடுத்​த​படி​யாக ஜெய்​மீத் படேல் 45, ஆர்யா தேசாய் 13 ரன்​கள் சேர்த்​தனர்.

6 பேட்​ஸ்​மேன்​கள் டக் அவுட் ஆனார்​கள். பெங்​கால் அணி தரப்​பில் முகமது ஷமி 10 ஓவர்​களை வீசி ஒரு மெய்​ட​னுடன் 38 ரன்​களை வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். முதல்தர கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது ஷமி 4 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார். ஷாபாஷ் அகமது 3 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். 141 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பெங்​கால் அணி முழு​மை​யாக 6 புள்​ளி​களை பெற்​றது.
அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

செய்தித்துளிகள்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குவாஹாட்டியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

2028-ம் ஆண்டு ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப், 2026-ம் ஆண்டு ஆசிய தொடர் ஓட்டம் ஆகியவற்றை நடத்துவதற்கான உரிமையை கோரியுள்ளது இந்திய தடகள சங்கம். இதில் உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் வரும் டிசம்பர் 10 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் டபிள்யூடிடி பைனல்ஸ் டேபிள் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான தியா சித்லே-மனுஷ் ஷா ஜோடி தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

சென்னை நேரு விளையாட்டரங்கில் 7-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் சென்னை அச்சீவர்ஸ் அகாடமியை சேர்ந்த பி.பி.அபிநந்தும், மகளிர் பிரிவில் எஸ்.கே.அகாடமியை சேர்ந்த எஸ்.யாஷினியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

யு-20 மகளிர் கால்பந்து நட்புரீதியிலான போட்டியில் இந்தியா – கஜகஸ்தான் அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here