“பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” – மனம் திறக்கும் நடராஜன்

0
21

ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான டி.நடராஜன் நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி​யில் விளை​யாடி வருகிறார். இந்த சீசனில் அவர், 3 ஆட்​டங்​களில் விளையாடி 4 விக்​கெட்​களை கைப்​பற்றி உள்​ளார். ஓவருக்கு சராசரி​யாக 7.9 ரன்​களை விட்டுக்கொடுத்துள்ளார்.

டெல்லி அணி தனது 4-வது ஆட்​டத்​தில் இன்று சிஎஸ்கேவுடன் சேப்​பாக்​கம் மைதானத்​தில் விளை​யாட உள்​ளது. இந்த போட்​டியையொட்டி நேற்று நடை​பெற்ற பத்திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது டி.நட​ராஜன் கூறிய​தாவது: கடந்த ஆண்​டு, எனக்​குக் கழுத்து எலும்​பில் காயம் ஏற்​பட்​டது, அது எனக்கு மிக​வும் கடின​மான கால​கட்​ட​மாக இருந்​தது.

அந்​தத் தருணம் முழு​வதும் அணி​யின் நிர்​வாகம், உதவிப் பணி​யாளர்​கள் மற்​றும் பயிற்​சி​யாளர்​கள் என்​னைத் தொடர்ந்து ஊக்​கு​வித்​தனர். நான் எத்​தகைய பயிற்சிகளைச் செய்ய வேண்​டும் என்​ப​தி​லும் அவர்​கள் எனக்கு வழி​காட்​டி​னார்​கள். டெல்​லி, சூரத், ஹைத​ரா​பாத் மற்​றும் துபாய் என பல இடங்​களில் நடந்த பயிற்சி முகாம்களில் நான் கலந்து கொண்​டேன்.

இவை அனைத்​தும் எனது பந்​து​வீச்சு லயத்​தை​யும், நம்பிக்கை​யை​யும் மீண்​டும் பெற உதவின. காயத்திலிருந்து மீண்டு வரு​வது என்​பது மன ரீதி​யாக​வும் சரி, உடல் ரீதி​யாக​வும் சரி, எப்​போதும் எளி​தானது அல்ல. ஒவ்​வொரு முறை​யும் நான் சிறப்​பாகச் செயல்​படும் போதெல்​லாம், துர​திர்​ஷ்ட​வச​மாக ஒரு காயம் குறுக்கே வந்து தடை​யாக நின்​றது.

கடந்த ஆறு முதல் ஏழு மாதங்​களாக, எனது உடல் தகுதி மற்​றும் பந்​து​வீச்​சுக்​காக மிகக் கடுமை​யாக உழைத்துள்ளேன். எனது யார்க்​கர் பந்​துகளை மீண்​டும் துல்​லிய​மாக வீச​வும், பந்​து​வீச்சு லயத்தை மீட்​க​வும் நான் நிறைய பயிற்சி செய்​தேன். இப்​போது எனது நம்​பிக்கை அதி​கரித்​துள்​ளது. சிறப்​பான விஷ​யங்​கள் நிகழ்​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்​ளது.

டி20 கிரிக்​கெட் இப்​போது நிறைய மாறி​விட்​டது, பேட்டர்கள் இப்​போது மிக​வும் சாதுர்​ய​மாகச் செயல்​படு​கிறார்​கள். அவர்​கள் பந்​து​வீச்​சாளர்​களுக்கு எதி​ராகத் தங்களை மிகச் சிறப்​பாகத் தயார் செய்​து​கொண்டு திட்​ட​மிடு​கிறார்​கள். எனவே, என்னை பொறுத்​தவரை​யில் எனத திட்​டங்​களில் தெளிவு இருப்​பது​தான் மிக முக்​கிய​மான விஷ​யம். ஒவ்​வொரு சூழலிலும் நான் எதைச் செயல்​படுத்த வேண்​டும் என்​பதை நான் அறிந்​திருக்க வேண்​டும்.

ஒரு​வேளை பந்​துகள் அடி​வாங்​கி​னாலும் எனது திட்​டத்​தில் தெளிவு இருந்​தால், என்​னால் சிறப்​பாக மீண்டு வர முடி​யும் என்று நம்​பு​கிறேன். சிறு​வய​திலிருந்தே நான் டென்​னிஸ் பால் கிரிக்​கெட் விளை​யாடி​யிருக்​கிறேன், அது எனக்​குப் பெரிதும் உதவி​யுள்​ளது. எனது செயல் திறனை மேம்​படுத்த, டென்​னிஸ் பந்​துகள், எடை அதி​க​முள்ள பந்​துகள் மற்​றும் சிவப்பு நிறப் பந்​துகளு​டன் பயிற்சி செய்​தேன்.

இது குறித்து நான் ஹைத​ரா​பாத் அணி​யில் விளை​யாடிய போது புவனேஷ்வர் குமாருடன் ஆலோ​சித்​துள்​ளேன். பந்தின் நீளத்​தைக் கட்​டுப்​படுத்​து​வதை மேம்​படுத்த, சிவப்பு நிறப் பந்​தில் மெது​வாகப் பயிற்சி செய்​யு​மாறு அவர் எனக்​குப் பரிந்​துரைத்​தார். அது எனது பந்​து​வீச்சை மேம்​படுத்​து​வ​தில் பெரும் உதவி​யாக இருந்​தது. முன்பெல்லாம் பந்​தின் தையலுக்கு குறுக்​காக பிடித்து யார்க்​கர்​கள் வீசுவேன். தற்​போது பந்​தின் தையலை இறுகப்​பற்றி யார்க்​கர் வீசுகிறேன். இதை சாதா​ரண​மாக செய்ய முடி​யாது. கடின பயிற்​சிகளுக்கு பின்​னரே வீசமுடிகிறது. இவ்​​வாறு நட​ராஜன்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here