‘மாநில அந்தஸ்துக்கும் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை!’ – புதுசா பேசும் புதுச்சேரி அதிமுக

0
20

புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து கிடைத்​து​விட்​டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்​ப​தைப் போல முக்​கியக் கட்​சிகள் அனைத்​தும் அதை ஒரு பிர​தானப் பிரச்​சினை​யாக பேசி வரும் நிலை​யில், “மாநில அந்​தஸ்​துக்​கும், மாநிலத்​தின் வளர்ச்​சிக்​கும் சம்​பந்​தம் இல்​லை. மாநில அந்​தஸ்து இருந்​தால் தான் சிறப்​பான ஆட்சி நடத்த முடி​யும் என்​ப​தெல்​லாம் ஒன்​றும் கிடை​யாது” என புதி​தாக ஒரு கருத்​தைப் பேசி இருக்​கிறது புதுச்​சேரி அதி​முக.

இதுகுறித்து நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய புதுச்​சேரி அதி​முக செய​லா​ளர் அன்​பழ​கன், “மாநில அந்​தஸ்தை அரசி​யலுக்​காக எல்​லோரும் பயன்​படுத்​துகின்​ற​னர். முதல்​வ​ரும் பயன்​படுத்​துகி​றார். மாநில அந்​தஸ்து இல்​லாமலேயே புதுச்​சேரி நல்ல நிலை​மைக்கு வரவில்​லை​யா? ரங்​க​சாமி ஏற்​கெனவே ஒரு​முறை முதல்​வ​ராக இருந்​த​போது, தான் அறி​வித்த திட்​டங்​களை செம்​மை​யாகச் செயல்​படுத்​தி​னாரே… இந்​தி​யா​விலேயே முதன்​மை​யான மாநில​மாக புதுச்​சேரி அப்​போது இருந்​ததே!

நேர்​மை​யான முறை​யில் தொழில் புரிய அரசு துணை​யிருக்க வேண்​டும். அந்த தொழிகள் மூலம் நியாய​மான வரி வசூலைச் செய்ய வேண்​டும். அதன் மூலம் கிடைக்​கும் வரு​வாயைக் கொண்டு உள்​கட்​டமைப்​பு​களை மேம்​படுத்த வேண்​டும். அனைத்​துக்​கும் மத்​திய அரசை எதிர்​பார்க்க வேண்​டிய அவசி​யம் இல்​லை. மத்​திய அரசால் பல விதத்​தில் புதுச்​சேரி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வரு​வாய் வரு​வதற்​கான வாய்ப்​பு​கள் இருக்​கிறது. மது​பான கொள்​முதல், மது​பான விநி​யோகத்தை அரசே செய்​தால் ரூ.1,000 கோடி வரு​வாய் கிடைக்​கும் இதை ஏன் செய்​ய​வில்​லை?

இங்கு பல தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​கள், பள்​ளி​கள் இருக்​கின்​றன. தனி​யார் பள்​ளி​களை தொடங்​குபவர்​கள் ஒன்​றிரண்டு ஆண்​டு​களி​லேயே கோடிகளுக்கு அதிப​தி​யாகின்​ற​னர். தங்​கள் இஷ்டத்​துக்கு கட்​ட​ணம் வசூலிக்​கும் இவர்​களால் அரசுக்கு ஏதே​னும் ஆதா​யம் இருக்​கிற​தா? இது​போன்ற விஷ​யங்​களில் நடவடிக்கை எடுக்​காமல் இருப்​ப​தற்​கும் மாநில அந்​தஸ்​துக்​கும் என்ன சம்​மந்​தம் இருக்​கிறது? யாரை ஏமாற்​றுகிறீர்​கள்?” என்று ஆவேசக் கேள்வி எழுப்​பி​னார்.

“அப்​படி​யா​னால் வரும் தேர்​தலில் மாநில அந்​தஸ்து கோரிக்​கையை அதி​முக முன்​வைக்​கா​தா?” என்று கேட்​டதற்​கு, “மாநில அந்​தஸ்து பெறு​வது என்​பது அதி​முக​வின் கொள்கை முடிவு. தமிழக முதல்​வ​ராக ஜெயலலிதா இருந்​த​போது, பிரதமர் வாஜ்​பா​யிடம் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்க வலி​யுறுத்​தி​னார். அதற்​கு, மத்​திய அமைச்​சரவை ஒப்​புதலும் கொடுத்​தது.

ஆனால், அதன்​பிறகு ஏற்​பட்ட ஆட்சி மாற்​றத்​தில் திமுக​வுடன் பாஜக கூட்​டணி அமைத்த நிலை​யில், புதுச்​சேரி மாநில அந்​தஸ்து கோரிக்கை கிடப்​பில் போடப்​பட்​டது. அதன் பிறகு மத்​தி​யில் இரண்டு முறை அமைந்த ஆட்​சிகளி​லும் திமுகவே தொடர்ந்​தது. அவர்​கள் மாநில அந்​தஸ்து பற்றி மத்​தி​யில் பேச​வில்​லை. தற்​போதுள்ள அரசுக்​கும் அழுத்​தம் தரப்​பட​வில்​லை. வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் மாநில அந்​தஸ்து பிரச்​சினையை நாங்​கள் வலி​யுறுத்​து​வோம். அதேசம​யம், மாநில அந்​தஸ்து இருந்​தால் தான் சிறப்​பான நிர்​வாகத்தை தரமுடி​யும் என்​பதை ஏற்க முடி​யாது” என்​றார் அன்​பழகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here