Home மாநில செய்திகள் அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்குப் பருவமழை: மே 16-ம் தேதி தொடங்குகிறது

அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்குப் பருவமழை: மே 16-ம் தேதி தொடங்குகிறது

0

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் – நிகோபார் தீவுப் பகுதிகளில் மே 16-ம் தேதி வாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், இன்று (மே 14) டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 15, 16-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-ம் தேதி தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, 15-ம் தேதி கோவை, நீலகிரி, 16-ம் தேதி தேனி, 17-ம் தேதி நீலகிரி, 18, 19-ம் தேதிகளில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version