ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் டிச.24 வரை சிறை​யில் அடைப்பு

0
191

பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றியை பெற்றதை குறிக்கும் ‘விஜய் திவஸ்’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 93 ஆயிரம் பேர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். போரின் விளைவாக வங்கதேசம் விடுதலை அடைந்தது. இதை குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி சார்பில் ‘விஜய் திவஸ்’ (வெற்றி தினம்) கொண்டாடப்படுகிறது.

இதன்படி, இந்திய ராணுவம் சார்பில் ‘விஜய் திவஸ்’ நேற்று கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக சென்னையில் கட்டப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தில் தென் பிராந்திய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.சீனிவாஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மூத்த ராணுவ அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here