மகளிர் தினத்தை முன்​னிட்டு ‘சிறகு’ சிறப்​புக் காட்சி

0
29

மாலா மணி​யனின் ஃபர்​ஸ்ட் காபி புரொடக்​ஷன்ஸ் தயாரித்​துள்ள திரைப்​படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படம் மூலம் இயக்குநராக அறி​முக​மாகிறார். ஹரி​கிருஷ்ணன் நாயகனாக நடிக்​கும் இப்​படத்​தில் கோவையைச் சேர்ந்த அக் ஷிதா நாயகி​யாக நடித்​துள்​ளார்.

நிவாஸ், வித்​யா, காளி வெங்​கட் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். அரோல் குரோலி இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ராஜா பட்​டாச்​சார்ஜி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இப்​படம், மகளிர் தினத்தை முன்​னிட்டு மார்ச் 8-ம் தேதி மதுரை​யில் உள்ள கோபுரம் சினி​மாஸ் திரையரங்​கில் மாலை 6 மணிக்​குச் சிறப்புக் காட்​சி​யாகத் திரை​யிடப்பட இருக்​கிறது.

இதுகுறித்து மாலா மணி​யன் கூறும்​போது, “எந்த காலத்துக்​கும் ஏற்ற கதை அம்​சத்​துடன் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. பயணம், இசை மற்​றும் உறவு​களை மையப்​படுத்தி ஃபீல் குட் படமாக உரு​வாகி இருக்​கிறது.

க்ர​வுட் ஃபண்​டிங் போல ‘பிரண்ட்ஸ் ஃபண்​டிங்’ என்று சொல்​லும் வித​மாக இந்த படத்தை நண்​பர்​கள் உதவியுடன் தயாரித்​துள்​ளேன். பெண்​களை மையப்படுத்தி உரு​வாகி​யுள்ள இப் படத்​தின் சிறப்​புக் காட்​சி​யில் இயக்​குநர் குட்டி ரேவ​தி, நாயகி அக் ஷிதா, நான் கலந்து கொள்​கிறோம்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here