சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

0
31

சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் துாய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்துள்​ளதை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி​யும், துாய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்​கள் போராட்​டம் நடத்​தினர்.

நீதி​மன்ற உத்​தர​வால், நள்​ளிர​வில் இவர்​கள் கைது செய்​து, குண்​டுக்​கட்​டாக அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். அதைத்​தொடர்ந்து செப்​. 4-ம் தேதி சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள மே தின பூங்​கா​வில், திடீரென திரண்ட 300-க்​கும் மேற்​பட்ட துாய்மைப் பணி​யாளர்​களை மீண்​டும் குண்​டுக்​கட்​டாக போலீஸ் கைது செய்​தது. இந்த திடீர் போராட்​டத்தை அடுத்து துாய்​மைப் பணி​யாளர்​களின் நடவடிக்​கைகளை போலீ​சார் கண்​காணித்து வந்​தனர்.

இந்​நிலை​யில் கொருக்​குப்பேட்டை அம்​பேத்​கர் நகரில், துாய்மைப் பணி​யாளர்​கள் 13 பேர் நேற்று முன்​தினம் பணி நிரந்​தரம் ​கோரி தங்​கள் வீட்​டரு​கில் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களுக்கு ஆதர​வாக 200-க்​கும் மேற்​பட்ட துாய்மைப் பணி​யாளர்​களும் திரண்​டனர். இத்​தகவல் அறிந்து வந்த போலீ​ஸார் அவர்​களை உடனடி​யாக கைது செய்து அப்​புறப்​படுத்​தி​யது.

அவர்​கள் நள்​ளிரவு 1 மணி​யள​வில் விடுவிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் பின்​புறம் (மாநக​ராட்​சிக்கு அரு​கே) 2-வது நாளாக அதே 13 தூய்மைப் பணி​யாளர்​கள் மீண்​டும் உண்​ணா​விரத போராட்​டத்​தில் நேற்று ஈடு​பட்​டனர். அங்கு வந்த போலீ​ஸார் தூய்மைப் பணி​யாளர்​களை தொடர்ந்து போராட விடா​மல் குண்​டுக்​கட்​டாக கைது செய்​தனர். இது தொடர்​பாக செய்​தி​ யாளர்​களிடம் தூய்மை பணி​யாளர்​கள் கூறுகை​யில், “அமைச்​சர் சேகர் பாபு மற்​றும் மேயர் பிரி​யா​வுடன் சேர்ந்து முதல்​வருக்கு நன்றி தெரி​வித்​தவர்​கள் தூய்மைப் பணி​யாளர்​கள் அல்ல. அவர்​கள் கட்​சிக்​காரர்​கள்.

அதனால் தான் பதாகையை மறைத்து வைத்​துக் கொண்டே பேசினர். நாங்​கள் 2 மாத​மாக வேலை​யில்​லாமல் மிக​வும் கஷ்டப்படுகிறோம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடிய​வில்​லை. முதல்​வர் எங்​களை சந்​தித்து இந்த பிரச்​சினைக்​கு தீர்​வு காண வேண்​டும்” என்​று தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here