சபரிமலை கோயிலில் தங்கம் மாயமான விவகாரம்: கேரள பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

0
19

 கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயிலில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்​லை என புகார் எழுந்தது. இது தொடர்​பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது.

தங்க முலாம் பூசப்​பட்ட பீடத்தை தேடி கண்​டு​பிடிக்க ஐயப்​பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்​புப் பிரிவு அதி​காரி​களுக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு நடத்​திய விசா​ரணை​யில், தங்க முலாம் பூசப்​பட்ட பீடம் மீட்​கப்பட்டது. உயர் நீதி​மன்ற விசா​ரணை​யில் துவார பால​கர் சிலைகளின் தங்க முலாம் காணா​மல் போயிருப்​பது தெரிய​வந்​தது. மொத்​தம் 4 கிலோ தங்​கம் மாய​மாகி இருக்​கிறது.

இந்த வழக்கு கேரள உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தங்​கம் மாய​மானது குறித்து சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரணை நடத்த நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். இதனிடையே கேரள சட்​டப்​பேரவை கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அப்போது காங்​கிரஸ் மூத்த தலை​வரும் சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான வி.டி.சதீசன் கூறும்​போது, “ஐயப்​பன் கோயி​லில் இருந்து தங்​கம் திருடப்​பட்டு உள்​ளது.

இந்த விவ​காரத்தை ஆளும் மார்க்​சிஸ்ட் அரசும் தேவசம் போர்​டும் மூடி மறைத்து வரு​கின்​றன. தொழில​திபர் உன்​னிகிருஷ்ணன் போற்​றியை இது​வரை கைது செய்​யாதது ஏன்? இதுகுறித்து சிபிஐ விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும். தேவசம் போர்டு அமைச்​சர் வாசவன், தேவசம் போர்டு தலை​வர் பிர​சாந்த் பதவி விலக வேண்​டும்’’ என்று வலி​யுறுத்​தி​னார். இந்த விவ​காரத்தை எழுப்பி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் பேர​வை​யில் கடும் அமளி​யில் ஈடு​பட்​டனர். தொடர்​ அமளி காரண​மாக சட்​டப்​பேர​வை நேற்​று நாள்​ முழு​வதும்​ ஒத்​திவைக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here